Tuesday, August 24, 2010

ஓர் குளிர் வார்த்தை !

தனிமை அடர்ந்திருக்க,
உறைகின்ற குளிர் பனி
வெறுமையில் தொலைந்த
எனக்குத் துணையாக.
மேகத்தை கச்சையாக்கி,
நீலத்தை கருமையாக்கி,
வன்மையாய் வந்தது இரவு
எப்போதும் அல்லாத
கொடூர முகங்கொண்டு.

பெண்மை இழந்து அனலாய்
காட்சியளித்தது நிலா.
அது என் ஒவ்வொரு
எலும்பாய் உருக்கி
தனிமையின் சோகத்தை
என் இளமையை ஊற்றி
ஒளியாய் எரித்திருந்தது.

No comments:

Post a Comment