Monday, March 22, 2010

மரணம் தேடி!

காயப்பட்டு தொலைதூரம்
ஓடி ஓடி போகிறேன், இந்த
வாழ்கை என்னை விடுவதில்லை.
நான் தேம்பித் தேம்பி அழுதபோதும்
காதல் என்னை விடுவதில்லை.
கதறிக் கதறி, விழுந்தெழுந்து ஓடினும்
பயம் என்னை விடுவதே இல்லை.
மரணம் தேடி ஓடுகிறேன்,
மரித்துப் போக நாடுகிறேன்,
ஆம், ஓர் நிரந்தர அகால மரணம்.
நிதம் நிதம் துடித்து மரணிக்கும் போது,
வலியாய் வலிக்கிறது, தாங்க முடியவில்லை!