Sunday, February 21, 2010

எம்மனம்!

கண்கள் உன்னைக் காணும்போது
கால்கள் ஏனோ பலம் இழக்கிறது.
மதி மயங்கித்தான் போகிறேன்,
மனம் ஏனோ பயந்து சிலிர்க்கிறது.
என்று தீரும் இந்த அதீத உணர்வு?
என்றிலிருந்து இவை உணர நேர்ந்தது?
இதயம் உடைப்பேனா, அறிவீனமாய்?
ஏதும் புரியவில்லை.
எது பற்றியும் நினைக்கவும் இல்லை,
உன்னைத் தவிர.
உன்னை நிராகரிக்கத் தொடங்கவோ?
இல்லை சற்று அவகாசம் கொடுக்கவோ?
என் சிந்தனைகள் நிலையானவை அல்ல.
ஏனெனில் என்னை ஆட்கொள்வது மனம்.

No comments:

Post a Comment